666- அந்திக் கிறிஸ்து யார்?

0 comments

தன்னைத் தீர்க்கத்தரிசி என்று அழைத்துக் கொள்ளும் ஜீன் டிக்சன் (Jeane Dixon) என்னும் அமெரிக்கப் பெண்மணி 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி இரவு தன் ஹொட்டல் அறையிலிருந்து ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டாளாம். அத்தரிசனத்தில் ஒரு கரிய நிற உருவம் ஒரு கரிய நிற குழந்தையை மத்திய ஆசியாவில் உள்ள ஒரு குடியானவப் பெண்ணிடம் ஒப்படைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் அத்தரிசனத்தின் விளக்கத்தை அறிய தன் உதவியாளர்களைக் கலந்தாலோசிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினர். கடைசியில் ஒரு உதவியாளன் பரிசுத்த வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆராய்ந்து விட்டு இத்தரிசனம் "அந்திக் கிறிஸ்துவின்" பிறப்பை எச்சரிக்கிறது என்ற விளக்கத்தைக் கொடுத்தான். இதன் அடிப்படையில் ஜீன் டிக்சன் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு அந்திக்கிறிஸ்து உலகில் பிறந்து விட்டான் என்ற தீர்க்கதரிசன அறிக்கையை வெளியிட்டாள். இத் தீர்க்கதரிசன அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜீன் டிசனுடைய அனேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போயிருந்தாலும் அவள் கூறின சில தீர்க்க தரிசனங்கள் அப்படியே நிறைவேறியிருந்தன. உதாரணமாய் ராபர்ட் F.கென்னடி, ஜான் F. கென்னடி ஆகிய இருவரும் எங்கு எப்போது மரிப்பார்கள் என்று அவள் கூறினாள். அது அப்படியே நடந்தது. அந்திக்கிறிஸ்துவை குறித்து ஜீன்டிக்சன் அறிவித்த தீர்க்கதரிசனம் அநேக சினிமா படத்தயாளிப்பாளர்களுக்கு விறு விறுப்பான "Subject" ஆக அமைந்தது. இதன் அடிப்படையில் ரோஸ் மேரி பேபி (Rose Mary Baby), ஹோலோகாஸ்ட-2000 (Holocaust-2000), அப்போகாலிப்ஸ் (Apocalypse), ஓமன் I, ஓமன் II (Ommen I, Ommen II) என்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக ஓமன் I-ம், II-ம் அந்திக்கிறிஸ்துவைக் குறித்த எச்சரிப்பை உலக மக்களுக்கு கொடுக்க எடுக்கபட்டதாக அதன் தயாரிப்பாளர் "பாப் மங்கர்" (Bob Munger) தெரிவித்துள்ளார். வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆதாரமாக திரையில் காண்பித்து இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படங்கள் உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டன.

இவ்வாறு திரைப்படங்கள் மூலம் பிரபலமாக்கப்பட்ட அந்திக்கிறிஸ்துவைக் குறித்து தெளிவாய் எச்சரிக்கிற புத்தகம் பரிசுத்த வேதாகமமே. இந்த அந்திக்கிறிஸ்து உலகை ஆளும்போது உலகில் உண்டாகப்போகிற மகா உபத்திரவ காலத்திற்கு காத்துக்கொள்ளக்கூடிய வழியையும் பரிசுத்த வேதாகமம்தான் கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு உலக சர்வாதிகாரி உலகை ஆளக்கூடிய சூழ்நிலைகள் இப்போது உலகில் உருவாகிக்கொண்டுள்ளன. வெகு சீக்கிரத்தில் அது சம்பவிக்கவும் போகிறது.

இப்படிப் பட்ட ஒரு உலக அரசு (World Govt.) ஏற்படக்கூடிய அவசியம் உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகில் உள்ள கோர்ட் (World Court), உலக பாங்கு (World Bank) இவையெல்லாம் வரப்போகிற உலக அரசின் முன்னோடிகள். இதல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட உலக அளவில் ஆன அமைப்புகள் இன்று உலகில் செயல்பட்டு வருகின்றன, இப்படிப்பட்ட ஒரு உலக அரசு ஏற்பட வேண்டும் என்ற ஒரு மசோதா நமது பாராளுமன்றத்தில் Dr.H.V.காமத் அவர்களால் கொண்டு வரப்பட்டதாக 8-5-78 ஹிந்து பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. உருவாகப்போகிற உலக அரசு வரப்போகிற அந்திக் கிறிஸ்துவின் ஆட்சிக்கு வழி வகுக்கும்.

அந்திகிறிஸ்துவை குறித்த திரைப்படங்களுக்கு ஆதாரமான தீர்க்கதரிசனத்தை வெளியிட்ட "ஜீன் டிக்சன்", தான் பரிசுத்த ஆவியினால் தான் தீர்க்கதரிசனம் சொல்வதாக தெரிவித்தாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. சுருங்கச் சொன்னால் அவள் ஒரு பிசாசினுடைய "மீடியம்" கிறிஸ்தவ விசுவாசிகள் ஜீன் டிக்சனுடைய தீர்க்கதரிசனத்துக்காய் காத்திருக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனத்திற்காய் விசுவாசிகள் காத்திருக்கவும் கூடாது என்று வேதம் உபாகமம் பதின்மூன்றாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களில் தெரிவிக்கிறது. அப்படியென்றால் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து வேதம் என்ன தெரிவிக்கிறது என்று இனி பார்ப்போம்.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.

இனம் கண்டு கொள்ளுங்கள்! கள்ளத்தீர்க்கதரிசிகளை!

0 comments


எழுதவேண்டியதன் கட்டாயம்

அண்மை நாட்களில் நான் பல பொய்யான தீர்கதரிசிகளையும், அவர்கள் சொல்லும் வேதாகமத்திற்கு புறம்பான தீர்க்கதரிசனங்களையும் நேரிலும்,Tv / Radioலும் பார்க்கவும், கேட்கவும் நேர்ந்தது. இது எனக்குள் வெறுப்பையும், கசப்பையும், ஏற்படுத்தியது. இவர்களுடைய தவறான போதனைகளையும், தீர்க்கதரிசனங்களையும் நம்பும் மனிதர்களை பார்த்தபோது மிகவும் கவலையும் ஆத்திரமும் வந்தது.

அந்த சமயம் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன:

  • மக்களுக்கு வேதாகமத்தைப்பற்றிய அறிவே இல்லையா? 
  • அல்லது ஜனங்கள் வேதமே வாசிப்பது இல்லையா?
  • அல்லது பொய்க்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியதபடிக்கு அனேகருடைய கண்கள் மூடியிருக்கின்றதா?  

பிற்பாடு நான் வேதாகமத்தையும் பல ஆவிக்குரிய மனிதர்கள் எழுதிய புஸ்தகங்களையும்  வாசிக்கும் போது அதற்கான விடையும் கிடைத்தது.

இயேசு கிறிஸ்துவின் போதனையைவிட அனேகருக்கு பொய்பேசுகின்ற தீர்க்கதரிசிகளைத்தான் பிடிக்கும் என்பதனை புரிந்து கொண்டேன்.
இயேசு சொன்னார்:
யோவான் 8: 43 - 44  என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
 
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

இன்று அனேகர் வேதாகமத்தை ஆராய்ந்து வாசிப்பதில்லை. வேதாகமம் தெரியாமல் ஒருவன் சொல்லும் தீர்க்கதரிசனம் வேதாகமத்துக்கு புறம்பானதா? இல்லையா? என்று எப்படி அறிந்து கொள்ள முடியும் ?????

வேதாகமத்தை வாசிக்க வேண்டும்

ஏசாயா 8: 20  வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

மக்களே ஆவியை சோதித்தறியுங்கள்

1 யோவான் 4: 1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
ஜனங்களை தேவன் முன்னெச்சரிக்கை செய்கின்றார்!  தேவன் எச்சரிக்கை செய்தும் அறிவில்லாமல் அழிந்து போக வேண்டாம் !!!

மக்களே எச்சரிக்கையாயிருங்கள்!

மத்தேயு 7: 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

1 தீமோத்தேயு 4: 1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 பேதுரு 1: 1 - 2  கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.


அப்போஸ்தலர் 20:  29 - 30  நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

தேவன் பொய் தீர்க்கதரிசிகளை எச்சரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கான நியாயத்தீர்ப்பையும் அறிவித்திருக்கின்றார். இந்த நியாயத்தீர்ப்பை அறிந்தென்னவோ அவர்கள் இன்னமும் அக்கிரமத்துக்கு மேல் அக்கிரமம் செய்கின்றார்கள்! <அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும்>

எச்சரிக்கை! பொய் தீர்க்கதரிசிகளுக்கு!

மத்தேயு 7: 22 - 23 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
  

உபாகமம் 18: 20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 
  

வெளி 18, 19  இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

  

எசேக்கியேல் 13

1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

4. இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

5. நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

6. கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

7. நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

8. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகியஆண்டவர் சொல்லுகிறார்.

9. அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

10. சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;




எரேமியா 23

9. தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.
16. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
11. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17. அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்றுகர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
21. அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
25. சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.
31. இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

26. எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

0 comments


சகோ.விஜய்

இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3) என்று சீஷர்கள் இயேசுவைக் கேட்டபோது அவர்களுக்கு பதிலளித்த ஆண்டவர் பஞ்சம், கொள்ளை நோய்கள், போர்கள், பூமிஅதிர்ச்சிகள் இவைகளையெல்லாம் சொல்லும் முன் முதலாவதாகவும் மிக முக்கியமானதாகவும் சொன்ன அடையாளம் வஞ்சகம் (DECEPTION)என்பதாகும்.
ஒன்றல்ல இரண்டல்ல அநேகர் அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24:5)என்பதே வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக இருக்கிறது.  “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் (மத்தேயு 24:4)“ என்று இயேசு உலகத்தாரைப் பார்த்து அல்ல தன்னைப் பின்பற்றும் ஜனங்களைப் பார்த்துச் சொன்னார்.
உங்களுக்குத் தெரியுமா?
நீங்களும் வஞ்சிக்கப்பட முடியும், ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்!!!
நான் எப்படி வஞ்சிக்கப்பட முடியும்… நான் ஒழுங்கா நல்ல ஆவிக்குரிய சர்ச்சுக்கு போறேன் ஜெபம் பண்றேன், தசமபாகம் கூட தவறாமல் கொடுக்கிறேன். நான் எப்படி வஞ்சிக்கப்பட முடியும்??? என்று நீங்கள் கேட்கலாம். தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட முடியும் என்று மாற்கு 13:22 சொல்லுகிறது.
பின்வரும் 15 எச்சரிக்கைகளையும் உங்கள் வாழ்க்கையோடு பொருத்தி ஆராய்ந்து பாருங்கள், ஆவியானவர் உதவியோடு சரி செய்யுங்கள் விசுவாசிகளை மோசம் போக்கும் கடைசிகால மாபெரும் வஞ்சகத்துக்குத் தப்புங்கள். இந்தப் 15 காரியங்கள் மட்டும்தான் என்பதல்ல. இயேசுவோடு தனிப்பட்ட உறவைக் காத்துக் கொள்வதில் அக்கறையாயிருங்கள். அவருக்கே செவிகொடுங்கள் அவர் அவர் அவர் மாத்திரமே பிரதானம்.

எச்சரிக்கை #1

ஆண்டவரையும் அயலாரையும் நேசிக்கச் சொல்லி அவர் கொடுத்த பிரதான கட்டளையை மறந்துவிட்டு, வெறும் சபைக்குச் செல்லுவதிலும், காணிக்கை கொடுப்பதிலும், ஊழியம் செய்வதிலும் மாத்திரமே திருப்தியுற்று இருக்கிறீர்களா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு குற்ற மனசாட்சியோடு போராடிக்கொண்டிருக்கும் பாவியை விட மதரீதியான சில காரியங்களைச் செய்துவிட்டு அதில் திருப்தியும் பெருமையும் அடைந்திருக்கும் விசுவாசியே பெரும் ஆபத்திலிருக்கிறான். ஏனனில் பாவி தன் பாவங்களை அறிந்திருக்கிறான் எளிதில் உடைக்கப்பட்டும் விடுவான். ஆனால் தன் கிறிஸ்தவத்தில் (கிறிஸ்துவில் அல்ல) திருப்தியடைந்திருக்கும் விசுவாசியோ தன்னைக் குறித்து உயர்ந்த எண்ணம் கொண்டிருப்பதால் சுயநீதி என்னும் கொடூரமான வஞ்சகவலையில் அகப்பட்டு இருக்கிறான்.
ஜாக்கிரதை! உங்கள் அஸ்திபாரத்தை கிறிஸ்து எனும் கன்மலையின்மீது அல்ல மதம் என்ற மணலின் மீது போட்டு இருக்கிறீர்கள். கிறிஸ்து உங்களிடத்தில் மார்க்க கிரியைகளை அல்ல அவரையும் அயலாரையும் நேசிக்கும் அன்பையே முதலாவது எதிர்பார்க்கிறார்.
மத்தேயு: 22:36-40

எச்சரிக்கை #2

பாவத்தின் மேல் வெறுப்பும் பரிசுத்ததின் மேல் வாஞ்சையும் நாளுக்குநாள் பெருகவில்லையா? உங்கள் தனி ஜெப நேரம் உங்களுக்கு இனிமையாக இல்லையா?
ஜாக்கிரதை! தேவனோடு உங்களுக்கு நெருங்கிய ஐக்கியம் இல்லை என்பதன் வெளிப்பாடுதான் இது. உங்கள் ஆத்ம திருப்தியை கர்த்தரிடத்தில் அல்ல வேறு எங்கோ தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
லூக்கா 12:34; நீதிமொழிகள் 27:7

எச்சரிக்கை #3

நீங்கள் வேதத்தை வாசிக்கக் கூடாதபடிக்கு ஒருவேளை படிக்கத் தெரியாதவரானால் வசனத்தை பிறர் வாசிக்கக் கேட்கக் கூடாதபடிக்கு உங்கள் சொந்த அலுவலில் பிசியாகவே இருக்கிறீர்களா?
எச்சரிக்கை! நீங்கள் மிக எளிதாய் வஞ்சிக்கப் படுவீர்கள்வேதத்தை கவனியாதவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சம் இல்லை என்று ஏசாயா 8:20 எச்சரிகிறது.
ஏசாயா 8:20, சங்கீதம் 119:165, ஓசியா 4:6 

எச்சரிக்கை #4

உங்கள் பாஸ்டர், உங்கள் சபையைத்தவிர வேறு சபைகளையோ ஊழியர்களையோ அங்கீகரிக்கவோ நேசிக்கவோ முடியவில்லையா? அவர்களுக்காகவும்  ஜெபிக்காமல் உங்கள் சபைக்காக மாத்திரமே ஜெபிக்கும்படி கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறீர்களா?
எச்சரிக்கை! இது வஞ்சகத்திலெல்லாம் மாபெரும் வஞ்சகம்.
I யோவான் 4:20, 1கொரிந்தியர் 12: 5-27, 1கொரிந்தியர் 1:10-13,

எச்சரிக்கை #5

அனுதினமும் உங்கள் சொந்த இருதயத்தை ஆராய்வதற்கும் சுத்திகரிக்கப்படுவதற்கும் தேவனிடத்தில் கிட்டிச் சேர்ந்து, அவரைப்போல மாறுவதற்கும் வாஞ்சையில்லாமல் வெறும் உபதேசங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வதில் ஆர்வமுடையவரா? 
அபாயம்! இது ஒரு ஆவிக்குரிய நோய் என்று வேதம் எச்சரிக்கிறது.
தீமோத்தேயு 6:4, தீத்து 3:9; I கொரிந்தியர் 11:16

எச்சரிக்கை #6

உங்கள் கண்களும் நாவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா?
எச்சரிக்கை! நீங்கள் ஆவிக்குரிய அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள்.
மத்தேயு 6:22, 23 யாக்கோபு 3:5-12,

எச்சரிக்கை #7

நீங்கள் ஜாதி உணர்வு உடையவரா?
நீங்கள் வஞ்சிக்கப்படுவது இருக்கட்டும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்பதை முதலாவது ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று உங்களை நீங்கள் அடையாளப்படுத்துவதால் நாடார், வன்னியர், தேவர், பள்ளர், பறையர் என்று வைராக்கியம் பாராட்டுவதால் நீங்கள் இந்து மதத்தின் ”வருணாசிரமக் கோட்பாட்டையே” இன்னும் நம்புகிறீர்கள் பரிசுத்த வேதாகமத்தை அல்ல என்பது தெளிவாகிறது. உங்களைப் படைத்தவர் கர்த்தரா? பிரம்மாவா? என்பதை இன்றே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
கலாத்தியர் 3:28

எச்சரிக்கை #8

உங்கள் வேதத்தை நீங்களே நேரடியாக வாசிக்காமல் அல்லது வசனத்தைக் கேட்காமல், ஏதேனும் ஒரு பிரசங்கியாருடைய பிரசங்கத்தையே தொடர்ந்து கேட்டால் போதும் என்ற உணர்வுடையவரா? அல்லது பிரசங்க மேடையில் யார் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?
அபாயம்! கேட்ட போதகம் சரிதானா என்று உங்கள் வேதத்தை நீங்களே ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பெரேயா பட்டணத்தார் பவுலின் போதகத்தையே பரிசோதித்துப் பார்த்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அதனால்தான் அவர்கள் தெசலோனிக்கே பட்டணத்தாரைவிட நற்குணசாலிகளாய் இருந்தார்கள் என்றும் அவர்களைப் பாராட்டுகிறது. சர்ப்பத்தைபோல வினா உள்ளவர்களாய் இருங்கள். இல்லாவிட்டால் இந்தக் கடைசி நாட்களில் யாரும் உங்களை எளிதாக வஞ்சிக்கமுடியும்.
அப்போஸ்தலர் 17:11, மத்தேயு 7:15, I தெசலோனிக்கேயர் 5:21

எச்சரிக்கை #9

பரிசுத்த ஆவியானவரை உள்ளான மனிதனில் அடையும் மாற்றத்தில், கனிகளில், சாட்சியான வாழ்க்கையில் தேடாமல் வெளிப்புற அடையாளங்களிலும் சரீரத்தில் ஏற்படும் அனுபவங்களிலும் மாத்திரமே தேடுகிறீர்களா?
எச்சரிக்கை: பரிசுத்த ஆவியின் பலன் வெறும் பரவசத்துக்கு அல்ல பிரதிஷ்டை வாழ்வு வாழவே அருளப்பட்டுள்ளது.
அப்போஸ்தலர் 1:8

எச்சரிக்கை #10

நீங்கள் செல்லும் சபையில் நித்தியத்துக்கு உரிய ஆசீர்வாதங்களை விட உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களைப் பற்றிய செய்திகளையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் சபையில் மலைப் பிரசங்கத்தைப் பற்றிய செய்திகளைக் கேட்டு வெகு காலமாயிற்றா?
ஜாக்கிரதை! நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள். ஒருவனும் கிரியை செய்யாத இராக்காலம் வருவதற்குள் நீங்களும் உங்கள் சபையும் இடுக்கமான வாசலுக்குள் நெருக்கமான வழிக்குள் மறுபடியும் விரைவாக வந்து சேருங்கள்.
பிலிப்பியர் 3:19, I கொரிந்தியர் 15:19

எச்சரிக்கை #11

நிலையான நகரம் எனக்கு இங்கு இல்லை, இந்த பூமியில் நான் ஒரு பரதேசி என்ற உணர்வோ, இயேசுவின் வருகையை ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனநிலையோ இல்லாமல் இருக்கிறீர்களா?
ஜாக்கிரதை! இது மனதளவில் உங்களை நம் அப்பாவையும் அவர் வீட்டையும் விட்டு தூரத்தில் வைத்திருக்க சாத்தான் செய்த திட்டமிட்ட சதி.
எபிரெயர் 13:14, II பேதுரு 3:12, 2 கொரிந்தியர் 5:1-6

எச்சரிக்கை #12

நாதியற்றிருக்கும் தரித்திரருக்கும் பசித்த வயிரோடு உணவுக்காய் ஏங்கும் திக்கற்ற பிள்ளைகளைக் குறித்து பரிதபிக்காமல் ஊழியங்களுக்குக் கொடுத்தால் மட்டுமே எனக்கு தேவன் ஐசுவரியத்தை அள்ளிக் கொடுப்பார் என்று உணர்வோடு தேவனுக்குக் கொடுக்கிறீர்களா?
ஜாக்கிரதை! சில பொய்யான போதனைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறீர்கள். அவ்விதமாய் நீங்கள் வஞ்சிக்கப்பட உங்களுக்குள் இருக்கும் பொருளாசையும் ஒரு காரணம். கொடுப்பதைக் குறித்து புதிய ஏற்பாடு சொல்லியுள்ள பகுதிகளை நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.
கலாத்தியர் 2:10, நீதிமொழிகள் 19:17, யாக்கோபு 1:27

எச்சரிக்கை #13

நீங்கள் உங்கள் சபையில் நற்சாட்சி பெற்றிருந்தும் உங்கள் சொந்த வீட்டில் உங்களுக்கு சாட்சி இல்லையா?
அப்படியானால் நீங்கள் இரட்டை வாழ்க்கை வாழுகிறீர்கள். மாய்மாலம் தேவன் வெறுக்கும் பிரதான பாவம். இதற்கு நாளை அல்ல இன்றே, இப்பொழுதே மனந்திரும்ப வேண்டியது அவசர அவசியம்.
அப்போஸ்தலர் 1:8; I தீமோத்தேயு 5:8;

எச்சரிக்கை #14

ஒரு படித்த அந்தஸ்த்துள்ள விசுவாசிக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தையும் மரியாதையையும்  ஒரு படிக்காத, ஏழை விசுவாசிக்குக் கொடுக்க முடியவில்லையா?
அப்படியானால் நீங்கள் கிறிஸ்துவை அல்ல ஒரு கனியற்ற வறட்டு மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம். பிரியமானவர்களே! இது கர்த்தர் பார்வையில் அருவருப்பானது என்பதை உணருங்கள்.
யாக்கோபு2:1-9

எச்சரிக்கை #15

கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் உங்கள் மேன்மை என்ன? புதிய உடன்படிக்கையில் உங்களுக்கு அருளப்பட்ட சிலாக்கியங்கள் என்னென்ன? நமக்கும் பழைய ஏற்ப்பாட்டு விசுவாசிகளுக்கும் என்ன வித்தியாசம் இவைகளையெல்லாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறீர்களா? நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் பவுல் எபேசியர் முதல் அதிகாரத்தில் கருத்தாய் ஜெபிக்கிறார். இதுவே நம் பிரதான தேவை.
எச்சரிக்கை! இது புரியாவிட்டால் பிள்ளைகளாக அல்ல வெறும் பக்தகோடிகளாகவே வாழ்ந்து முடித்து விடுவோம். நாம் பிரதானமானவைகளைக் குறைவாகவும் தேவையற்றவற்றைப் பற்றி அதிகமாகவும் பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னே உள்ள ஒரே வழி: அப்போஸ்தலர் எழுதிய நிருபங்களை  ஆவியானவர் துணையோடு நாமே ஆராய்ந்து பார்ப்பதுதான்.
எபேசியர்1:16-19
பிரியமானவர்களே! உங்களைப் புண்படுத்த அல்ல, உங்களை அதிகமாய் நேசிப்பதாலேயே உங்களில் ஒருவரும் கெட்டுப் போகக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த எச்சரிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள் என்று நீதிமொழிகள் 27:6 சொல்லுகிறது. இது உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்தால் இந்த செய்தியின் பிரிண்ட் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. இதைப் Download செய்து Printout எடுத்து கணினியோ இணையதளத்தையோ பயன்படுத்தாத உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சபையாருக்கும் கொடுங்கள். அவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

Thursday 30 June 2011

666- அந்திக் கிறிஸ்து யார்?


தன்னைத் தீர்க்கத்தரிசி என்று அழைத்துக் கொள்ளும் ஜீன் டிக்சன் (Jeane Dixon) என்னும் அமெரிக்கப் பெண்மணி 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி இரவு தன் ஹொட்டல் அறையிலிருந்து ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டாளாம். அத்தரிசனத்தில் ஒரு கரிய நிற உருவம் ஒரு கரிய நிற குழந்தையை மத்திய ஆசியாவில் உள்ள ஒரு குடியானவப் பெண்ணிடம் ஒப்படைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் அத்தரிசனத்தின் விளக்கத்தை அறிய தன் உதவியாளர்களைக் கலந்தாலோசிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினர். கடைசியில் ஒரு உதவியாளன் பரிசுத்த வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆராய்ந்து விட்டு இத்தரிசனம் "அந்திக் கிறிஸ்துவின்" பிறப்பை எச்சரிக்கிறது என்ற விளக்கத்தைக் கொடுத்தான். இதன் அடிப்படையில் ஜீன் டிக்சன் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு அந்திக்கிறிஸ்து உலகில் பிறந்து விட்டான் என்ற தீர்க்கதரிசன அறிக்கையை வெளியிட்டாள். இத் தீர்க்கதரிசன அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜீன் டிசனுடைய அனேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போயிருந்தாலும் அவள் கூறின சில தீர்க்க தரிசனங்கள் அப்படியே நிறைவேறியிருந்தன. உதாரணமாய் ராபர்ட் F.கென்னடி, ஜான் F. கென்னடி ஆகிய இருவரும் எங்கு எப்போது மரிப்பார்கள் என்று அவள் கூறினாள். அது அப்படியே நடந்தது. அந்திக்கிறிஸ்துவை குறித்து ஜீன்டிக்சன் அறிவித்த தீர்க்கதரிசனம் அநேக சினிமா படத்தயாளிப்பாளர்களுக்கு விறு விறுப்பான "Subject" ஆக அமைந்தது. இதன் அடிப்படையில் ரோஸ் மேரி பேபி (Rose Mary Baby), ஹோலோகாஸ்ட-2000 (Holocaust-2000), அப்போகாலிப்ஸ் (Apocalypse), ஓமன் I, ஓமன் II (Ommen I, Ommen II) என்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக ஓமன் I-ம், II-ம் அந்திக்கிறிஸ்துவைக் குறித்த எச்சரிப்பை உலக மக்களுக்கு கொடுக்க எடுக்கபட்டதாக அதன் தயாரிப்பாளர் "பாப் மங்கர்" (Bob Munger) தெரிவித்துள்ளார். வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆதாரமாக திரையில் காண்பித்து இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படங்கள் உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டன.

இவ்வாறு திரைப்படங்கள் மூலம் பிரபலமாக்கப்பட்ட அந்திக்கிறிஸ்துவைக் குறித்து தெளிவாய் எச்சரிக்கிற புத்தகம் பரிசுத்த வேதாகமமே. இந்த அந்திக்கிறிஸ்து உலகை ஆளும்போது உலகில் உண்டாகப்போகிற மகா உபத்திரவ காலத்திற்கு காத்துக்கொள்ளக்கூடிய வழியையும் பரிசுத்த வேதாகமம்தான் கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு உலக சர்வாதிகாரி உலகை ஆளக்கூடிய சூழ்நிலைகள் இப்போது உலகில் உருவாகிக்கொண்டுள்ளன. வெகு சீக்கிரத்தில் அது சம்பவிக்கவும் போகிறது.

இப்படிப் பட்ட ஒரு உலக அரசு (World Govt.) ஏற்படக்கூடிய அவசியம் உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகில் உள்ள கோர்ட் (World Court), உலக பாங்கு (World Bank) இவையெல்லாம் வரப்போகிற உலக அரசின் முன்னோடிகள். இதல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட உலக அளவில் ஆன அமைப்புகள் இன்று உலகில் செயல்பட்டு வருகின்றன, இப்படிப்பட்ட ஒரு உலக அரசு ஏற்பட வேண்டும் என்ற ஒரு மசோதா நமது பாராளுமன்றத்தில் Dr.H.V.காமத் அவர்களால் கொண்டு வரப்பட்டதாக 8-5-78 ஹிந்து பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. உருவாகப்போகிற உலக அரசு வரப்போகிற அந்திக் கிறிஸ்துவின் ஆட்சிக்கு வழி வகுக்கும்.

அந்திகிறிஸ்துவை குறித்த திரைப்படங்களுக்கு ஆதாரமான தீர்க்கதரிசனத்தை வெளியிட்ட "ஜீன் டிக்சன்", தான் பரிசுத்த ஆவியினால் தான் தீர்க்கதரிசனம் சொல்வதாக தெரிவித்தாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. சுருங்கச் சொன்னால் அவள் ஒரு பிசாசினுடைய "மீடியம்" கிறிஸ்தவ விசுவாசிகள் ஜீன் டிக்சனுடைய தீர்க்கதரிசனத்துக்காய் காத்திருக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனத்திற்காய் விசுவாசிகள் காத்திருக்கவும் கூடாது என்று வேதம் உபாகமம் பதின்மூன்றாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களில் தெரிவிக்கிறது. அப்படியென்றால் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து வேதம் என்ன தெரிவிக்கிறது என்று இனி பார்ப்போம்.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.

Tuesday 3 May 2011

இனம் கண்டு கொள்ளுங்கள்! கள்ளத்தீர்க்கதரிசிகளை!



எழுதவேண்டியதன் கட்டாயம்

அண்மை நாட்களில் நான் பல பொய்யான தீர்கதரிசிகளையும், அவர்கள் சொல்லும் வேதாகமத்திற்கு புறம்பான தீர்க்கதரிசனங்களையும் நேரிலும்,Tv / Radioலும் பார்க்கவும், கேட்கவும் நேர்ந்தது. இது எனக்குள் வெறுப்பையும், கசப்பையும், ஏற்படுத்தியது. இவர்களுடைய தவறான போதனைகளையும், தீர்க்கதரிசனங்களையும் நம்பும் மனிதர்களை பார்த்தபோது மிகவும் கவலையும் ஆத்திரமும் வந்தது.

அந்த சமயம் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன:

  • மக்களுக்கு வேதாகமத்தைப்பற்றிய அறிவே இல்லையா? 
  • அல்லது ஜனங்கள் வேதமே வாசிப்பது இல்லையா?
  • அல்லது பொய்க்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியதபடிக்கு அனேகருடைய கண்கள் மூடியிருக்கின்றதா?  

பிற்பாடு நான் வேதாகமத்தையும் பல ஆவிக்குரிய மனிதர்கள் எழுதிய புஸ்தகங்களையும்  வாசிக்கும் போது அதற்கான விடையும் கிடைத்தது.

இயேசு கிறிஸ்துவின் போதனையைவிட அனேகருக்கு பொய்பேசுகின்ற தீர்க்கதரிசிகளைத்தான் பிடிக்கும் என்பதனை புரிந்து கொண்டேன்.
இயேசு சொன்னார்:
யோவான் 8: 43 - 44  என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
 
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

இன்று அனேகர் வேதாகமத்தை ஆராய்ந்து வாசிப்பதில்லை. வேதாகமம் தெரியாமல் ஒருவன் சொல்லும் தீர்க்கதரிசனம் வேதாகமத்துக்கு புறம்பானதா? இல்லையா? என்று எப்படி அறிந்து கொள்ள முடியும் ?????

வேதாகமத்தை வாசிக்க வேண்டும்

ஏசாயா 8: 20  வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

மக்களே ஆவியை சோதித்தறியுங்கள்

1 யோவான் 4: 1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
ஜனங்களை தேவன் முன்னெச்சரிக்கை செய்கின்றார்!  தேவன் எச்சரிக்கை செய்தும் அறிவில்லாமல் அழிந்து போக வேண்டாம் !!!

மக்களே எச்சரிக்கையாயிருங்கள்!

மத்தேயு 7: 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

1 தீமோத்தேயு 4: 1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 பேதுரு 1: 1 - 2  கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.


அப்போஸ்தலர் 20:  29 - 30  நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

தேவன் பொய் தீர்க்கதரிசிகளை எச்சரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கான நியாயத்தீர்ப்பையும் அறிவித்திருக்கின்றார். இந்த நியாயத்தீர்ப்பை அறிந்தென்னவோ அவர்கள் இன்னமும் அக்கிரமத்துக்கு மேல் அக்கிரமம் செய்கின்றார்கள்! <அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும்>

எச்சரிக்கை! பொய் தீர்க்கதரிசிகளுக்கு!

மத்தேயு 7: 22 - 23 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
  

உபாகமம் 18: 20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 
  

வெளி 18, 19  இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

  

எசேக்கியேல் 13

1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

4. இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

5. நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

6. கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

7. நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

8. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகியஆண்டவர் சொல்லுகிறார்.

9. அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

10. சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;




எரேமியா 23

9. தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.
16. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
11. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17. அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்றுகர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
21. அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
25. சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.
31. இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

26. எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.

Sunday 1 May 2011

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!



சகோ.விஜய்

இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3) என்று சீஷர்கள் இயேசுவைக் கேட்டபோது அவர்களுக்கு பதிலளித்த ஆண்டவர் பஞ்சம், கொள்ளை நோய்கள், போர்கள், பூமிஅதிர்ச்சிகள் இவைகளையெல்லாம் சொல்லும் முன் முதலாவதாகவும் மிக முக்கியமானதாகவும் சொன்ன அடையாளம் வஞ்சகம் (DECEPTION)என்பதாகும்.
ஒன்றல்ல இரண்டல்ல அநேகர் அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24:5)என்பதே வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக இருக்கிறது.  “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் (மத்தேயு 24:4)“ என்று இயேசு உலகத்தாரைப் பார்த்து அல்ல தன்னைப் பின்பற்றும் ஜனங்களைப் பார்த்துச் சொன்னார்.
உங்களுக்குத் தெரியுமா?
நீங்களும் வஞ்சிக்கப்பட முடியும், ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்!!!
நான் எப்படி வஞ்சிக்கப்பட முடியும்… நான் ஒழுங்கா நல்ல ஆவிக்குரிய சர்ச்சுக்கு போறேன் ஜெபம் பண்றேன், தசமபாகம் கூட தவறாமல் கொடுக்கிறேன். நான் எப்படி வஞ்சிக்கப்பட முடியும்??? என்று நீங்கள் கேட்கலாம். தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட முடியும் என்று மாற்கு 13:22 சொல்லுகிறது.
பின்வரும் 15 எச்சரிக்கைகளையும் உங்கள் வாழ்க்கையோடு பொருத்தி ஆராய்ந்து பாருங்கள், ஆவியானவர் உதவியோடு சரி செய்யுங்கள் விசுவாசிகளை மோசம் போக்கும் கடைசிகால மாபெரும் வஞ்சகத்துக்குத் தப்புங்கள். இந்தப் 15 காரியங்கள் மட்டும்தான் என்பதல்ல. இயேசுவோடு தனிப்பட்ட உறவைக் காத்துக் கொள்வதில் அக்கறையாயிருங்கள். அவருக்கே செவிகொடுங்கள் அவர் அவர் அவர் மாத்திரமே பிரதானம்.

எச்சரிக்கை #1

ஆண்டவரையும் அயலாரையும் நேசிக்கச் சொல்லி அவர் கொடுத்த பிரதான கட்டளையை மறந்துவிட்டு, வெறும் சபைக்குச் செல்லுவதிலும், காணிக்கை கொடுப்பதிலும், ஊழியம் செய்வதிலும் மாத்திரமே திருப்தியுற்று இருக்கிறீர்களா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு குற்ற மனசாட்சியோடு போராடிக்கொண்டிருக்கும் பாவியை விட மதரீதியான சில காரியங்களைச் செய்துவிட்டு அதில் திருப்தியும் பெருமையும் அடைந்திருக்கும் விசுவாசியே பெரும் ஆபத்திலிருக்கிறான். ஏனனில் பாவி தன் பாவங்களை அறிந்திருக்கிறான் எளிதில் உடைக்கப்பட்டும் விடுவான். ஆனால் தன் கிறிஸ்தவத்தில் (கிறிஸ்துவில் அல்ல) திருப்தியடைந்திருக்கும் விசுவாசியோ தன்னைக் குறித்து உயர்ந்த எண்ணம் கொண்டிருப்பதால் சுயநீதி என்னும் கொடூரமான வஞ்சகவலையில் அகப்பட்டு இருக்கிறான்.
ஜாக்கிரதை! உங்கள் அஸ்திபாரத்தை கிறிஸ்து எனும் கன்மலையின்மீது அல்ல மதம் என்ற மணலின் மீது போட்டு இருக்கிறீர்கள். கிறிஸ்து உங்களிடத்தில் மார்க்க கிரியைகளை அல்ல அவரையும் அயலாரையும் நேசிக்கும் அன்பையே முதலாவது எதிர்பார்க்கிறார்.
மத்தேயு: 22:36-40

எச்சரிக்கை #2

பாவத்தின் மேல் வெறுப்பும் பரிசுத்ததின் மேல் வாஞ்சையும் நாளுக்குநாள் பெருகவில்லையா? உங்கள் தனி ஜெப நேரம் உங்களுக்கு இனிமையாக இல்லையா?
ஜாக்கிரதை! தேவனோடு உங்களுக்கு நெருங்கிய ஐக்கியம் இல்லை என்பதன் வெளிப்பாடுதான் இது. உங்கள் ஆத்ம திருப்தியை கர்த்தரிடத்தில் அல்ல வேறு எங்கோ தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
லூக்கா 12:34; நீதிமொழிகள் 27:7

எச்சரிக்கை #3

நீங்கள் வேதத்தை வாசிக்கக் கூடாதபடிக்கு ஒருவேளை படிக்கத் தெரியாதவரானால் வசனத்தை பிறர் வாசிக்கக் கேட்கக் கூடாதபடிக்கு உங்கள் சொந்த அலுவலில் பிசியாகவே இருக்கிறீர்களா?
எச்சரிக்கை! நீங்கள் மிக எளிதாய் வஞ்சிக்கப் படுவீர்கள்வேதத்தை கவனியாதவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சம் இல்லை என்று ஏசாயா 8:20 எச்சரிகிறது.
ஏசாயா 8:20, சங்கீதம் 119:165, ஓசியா 4:6 

எச்சரிக்கை #4

உங்கள் பாஸ்டர், உங்கள் சபையைத்தவிர வேறு சபைகளையோ ஊழியர்களையோ அங்கீகரிக்கவோ நேசிக்கவோ முடியவில்லையா? அவர்களுக்காகவும்  ஜெபிக்காமல் உங்கள் சபைக்காக மாத்திரமே ஜெபிக்கும்படி கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறீர்களா?
எச்சரிக்கை! இது வஞ்சகத்திலெல்லாம் மாபெரும் வஞ்சகம்.
I யோவான் 4:20, 1கொரிந்தியர் 12: 5-27, 1கொரிந்தியர் 1:10-13,

எச்சரிக்கை #5

அனுதினமும் உங்கள் சொந்த இருதயத்தை ஆராய்வதற்கும் சுத்திகரிக்கப்படுவதற்கும் தேவனிடத்தில் கிட்டிச் சேர்ந்து, அவரைப்போல மாறுவதற்கும் வாஞ்சையில்லாமல் வெறும் உபதேசங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வதில் ஆர்வமுடையவரா? 
அபாயம்! இது ஒரு ஆவிக்குரிய நோய் என்று வேதம் எச்சரிக்கிறது.
தீமோத்தேயு 6:4, தீத்து 3:9; I கொரிந்தியர் 11:16

எச்சரிக்கை #6

உங்கள் கண்களும் நாவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா?
எச்சரிக்கை! நீங்கள் ஆவிக்குரிய அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள்.
மத்தேயு 6:22, 23 யாக்கோபு 3:5-12,

எச்சரிக்கை #7

நீங்கள் ஜாதி உணர்வு உடையவரா?
நீங்கள் வஞ்சிக்கப்படுவது இருக்கட்டும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்பதை முதலாவது ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று உங்களை நீங்கள் அடையாளப்படுத்துவதால் நாடார், வன்னியர், தேவர், பள்ளர், பறையர் என்று வைராக்கியம் பாராட்டுவதால் நீங்கள் இந்து மதத்தின் ”வருணாசிரமக் கோட்பாட்டையே” இன்னும் நம்புகிறீர்கள் பரிசுத்த வேதாகமத்தை அல்ல என்பது தெளிவாகிறது. உங்களைப் படைத்தவர் கர்த்தரா? பிரம்மாவா? என்பதை இன்றே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
கலாத்தியர் 3:28

எச்சரிக்கை #8

உங்கள் வேதத்தை நீங்களே நேரடியாக வாசிக்காமல் அல்லது வசனத்தைக் கேட்காமல், ஏதேனும் ஒரு பிரசங்கியாருடைய பிரசங்கத்தையே தொடர்ந்து கேட்டால் போதும் என்ற உணர்வுடையவரா? அல்லது பிரசங்க மேடையில் யார் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?
அபாயம்! கேட்ட போதகம் சரிதானா என்று உங்கள் வேதத்தை நீங்களே ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பெரேயா பட்டணத்தார் பவுலின் போதகத்தையே பரிசோதித்துப் பார்த்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அதனால்தான் அவர்கள் தெசலோனிக்கே பட்டணத்தாரைவிட நற்குணசாலிகளாய் இருந்தார்கள் என்றும் அவர்களைப் பாராட்டுகிறது. சர்ப்பத்தைபோல வினா உள்ளவர்களாய் இருங்கள். இல்லாவிட்டால் இந்தக் கடைசி நாட்களில் யாரும் உங்களை எளிதாக வஞ்சிக்கமுடியும்.
அப்போஸ்தலர் 17:11, மத்தேயு 7:15, I தெசலோனிக்கேயர் 5:21

எச்சரிக்கை #9

பரிசுத்த ஆவியானவரை உள்ளான மனிதனில் அடையும் மாற்றத்தில், கனிகளில், சாட்சியான வாழ்க்கையில் தேடாமல் வெளிப்புற அடையாளங்களிலும் சரீரத்தில் ஏற்படும் அனுபவங்களிலும் மாத்திரமே தேடுகிறீர்களா?
எச்சரிக்கை: பரிசுத்த ஆவியின் பலன் வெறும் பரவசத்துக்கு அல்ல பிரதிஷ்டை வாழ்வு வாழவே அருளப்பட்டுள்ளது.
அப்போஸ்தலர் 1:8

எச்சரிக்கை #10

நீங்கள் செல்லும் சபையில் நித்தியத்துக்கு உரிய ஆசீர்வாதங்களை விட உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களைப் பற்றிய செய்திகளையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் சபையில் மலைப் பிரசங்கத்தைப் பற்றிய செய்திகளைக் கேட்டு வெகு காலமாயிற்றா?
ஜாக்கிரதை! நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள். ஒருவனும் கிரியை செய்யாத இராக்காலம் வருவதற்குள் நீங்களும் உங்கள் சபையும் இடுக்கமான வாசலுக்குள் நெருக்கமான வழிக்குள் மறுபடியும் விரைவாக வந்து சேருங்கள்.
பிலிப்பியர் 3:19, I கொரிந்தியர் 15:19

எச்சரிக்கை #11

நிலையான நகரம் எனக்கு இங்கு இல்லை, இந்த பூமியில் நான் ஒரு பரதேசி என்ற உணர்வோ, இயேசுவின் வருகையை ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனநிலையோ இல்லாமல் இருக்கிறீர்களா?
ஜாக்கிரதை! இது மனதளவில் உங்களை நம் அப்பாவையும் அவர் வீட்டையும் விட்டு தூரத்தில் வைத்திருக்க சாத்தான் செய்த திட்டமிட்ட சதி.
எபிரெயர் 13:14, II பேதுரு 3:12, 2 கொரிந்தியர் 5:1-6

எச்சரிக்கை #12

நாதியற்றிருக்கும் தரித்திரருக்கும் பசித்த வயிரோடு உணவுக்காய் ஏங்கும் திக்கற்ற பிள்ளைகளைக் குறித்து பரிதபிக்காமல் ஊழியங்களுக்குக் கொடுத்தால் மட்டுமே எனக்கு தேவன் ஐசுவரியத்தை அள்ளிக் கொடுப்பார் என்று உணர்வோடு தேவனுக்குக் கொடுக்கிறீர்களா?
ஜாக்கிரதை! சில பொய்யான போதனைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறீர்கள். அவ்விதமாய் நீங்கள் வஞ்சிக்கப்பட உங்களுக்குள் இருக்கும் பொருளாசையும் ஒரு காரணம். கொடுப்பதைக் குறித்து புதிய ஏற்பாடு சொல்லியுள்ள பகுதிகளை நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.
கலாத்தியர் 2:10, நீதிமொழிகள் 19:17, யாக்கோபு 1:27

எச்சரிக்கை #13

நீங்கள் உங்கள் சபையில் நற்சாட்சி பெற்றிருந்தும் உங்கள் சொந்த வீட்டில் உங்களுக்கு சாட்சி இல்லையா?
அப்படியானால் நீங்கள் இரட்டை வாழ்க்கை வாழுகிறீர்கள். மாய்மாலம் தேவன் வெறுக்கும் பிரதான பாவம். இதற்கு நாளை அல்ல இன்றே, இப்பொழுதே மனந்திரும்ப வேண்டியது அவசர அவசியம்.
அப்போஸ்தலர் 1:8; I தீமோத்தேயு 5:8;

எச்சரிக்கை #14

ஒரு படித்த அந்தஸ்த்துள்ள விசுவாசிக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தையும் மரியாதையையும்  ஒரு படிக்காத, ஏழை விசுவாசிக்குக் கொடுக்க முடியவில்லையா?
அப்படியானால் நீங்கள் கிறிஸ்துவை அல்ல ஒரு கனியற்ற வறட்டு மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம். பிரியமானவர்களே! இது கர்த்தர் பார்வையில் அருவருப்பானது என்பதை உணருங்கள்.
யாக்கோபு2:1-9

எச்சரிக்கை #15

கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் உங்கள் மேன்மை என்ன? புதிய உடன்படிக்கையில் உங்களுக்கு அருளப்பட்ட சிலாக்கியங்கள் என்னென்ன? நமக்கும் பழைய ஏற்ப்பாட்டு விசுவாசிகளுக்கும் என்ன வித்தியாசம் இவைகளையெல்லாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறீர்களா? நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் பவுல் எபேசியர் முதல் அதிகாரத்தில் கருத்தாய் ஜெபிக்கிறார். இதுவே நம் பிரதான தேவை.
எச்சரிக்கை! இது புரியாவிட்டால் பிள்ளைகளாக அல்ல வெறும் பக்தகோடிகளாகவே வாழ்ந்து முடித்து விடுவோம். நாம் பிரதானமானவைகளைக் குறைவாகவும் தேவையற்றவற்றைப் பற்றி அதிகமாகவும் பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னே உள்ள ஒரே வழி: அப்போஸ்தலர் எழுதிய நிருபங்களை  ஆவியானவர் துணையோடு நாமே ஆராய்ந்து பார்ப்பதுதான்.
எபேசியர்1:16-19
பிரியமானவர்களே! உங்களைப் புண்படுத்த அல்ல, உங்களை அதிகமாய் நேசிப்பதாலேயே உங்களில் ஒருவரும் கெட்டுப் போகக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த எச்சரிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள் என்று நீதிமொழிகள் 27:6 சொல்லுகிறது. இது உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்தால் இந்த செய்தியின் பிரிண்ட் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. இதைப் Download செய்து Printout எடுத்து கணினியோ இணையதளத்தையோ பயன்படுத்தாத உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சபையாருக்கும் கொடுங்கள். அவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.